Saturday, 10 March 2012

அற்புதமாய் அதிசயமாய் தாயவள் சந்நிதியில் இடம் பெற்ற புனித சம்பவம்.... முழுமையான தகவல்... எமக்கு கிடைத்தவரை....

இன்றைய தினம் நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற அற்புத நிகழ்வு.....


நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நாகமாணிக்கக் கல் கக்கிய அதிசயம்.
மட்டக் களப்பில் இருந்து வருகைதந்து,நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பாம்பு நடனம் போட்ட குறிப்பிடப்பட்ட இந்த நபர்,தனது வாயில் இருந்து நாக மாணிக்கக் கல்லை கக்கி ஆலய நிர்வாகத் தலை வரிடம் கொடுக்கப் பட்டது.இவ் அதிசய நிகழ்வு இன்று 10 .03 .2012 காலை நிகழப் பட்டது 


அம்பாள் ஆலயத்திற்கு மட்டக்களப்பில் இருந்து அம்பாளைத்தரிசிக்க வந்த அடியவர் ஒருவருக்கு ஏற்ப்பட்ட அருள் கலையில் நாகம் போன்று அசைந்தாடி நாகரத்தின கல்லினை தனது வாயினால் இரத்தத்துடன் கக்கி எடுத்து அதனை ஆலய நிர்வாக தலைவரிடம் வழங்கி இவ் நாகரத்தின கல்லினை 9 ஆண்டுகளுக்கு பின்னர் எடுக்கும் படி கூறியுள்ளார். 
 
மட்டக்களப்பில் இருந்து வந்த மூர்த்தி  தர்சன் என்ற அடியாரே இந்த அற்புதத்தை நிகழ்த்தினார் . 

அத்துடன் அவ் நாகரத்தின கல்லினை 9 வருடங்களின் பின்னர் பார்க்கின்ற போது அதன் முழு சக்தியும் அதில் புலப்படும் எனவும் இதனால் பார்ப்பவர்கள் பார்வை இழக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இவ் புனித நாகரத்தினத்தை பேப்பர் உறையினால் சுற்றி தற்போது ஆலய நகைப் பெட்டியினுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இவர் தனது அருள் கலையில் அம்பிகையின் ஆலயத்தோற்றம் போன்று ஆலயத்தின் நிலத்தின் அடியினில் இருப்பதாகவும் ஆலயத்தில் தற்போது உள்ளகல்வெட்டு போன்ற கல்வெட்டும் நிலத்தின் அடியினுள் இருப்பதாகவும் அக் கல்வெட்டை 9 வருடங்களின் பின்னர் எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 




இவ் அதிசய நிகழ்வு இன்று 10 .03 .2012 காலை இடம் பெற்றது. 

மேற்படி தகவல்கள் வேறு இருந்தால் பிரசுரிக்கப்படும்.....

நன்றி..

நயினை நாகபூஷணி அம்மன் பாதம் பணிந்து....
நயினைத் தினசரிச் செய்தி.
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி......
 


No comments:

Post a Comment