Showing posts with label விசித்திரம். Show all posts
Showing posts with label விசித்திரம். Show all posts

Saturday, 10 March 2012

அற்புதமாய் அதிசயமாய் தாயவள் சந்நிதியில் இடம் பெற்ற புனித சம்பவம்.... முழுமையான தகவல்... எமக்கு கிடைத்தவரை....

இன்றைய தினம் நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற அற்புத நிகழ்வு.....


நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நாகமாணிக்கக் கல் கக்கிய அதிசயம்.
மட்டக் களப்பில் இருந்து வருகைதந்து,நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பாம்பு நடனம் போட்ட குறிப்பிடப்பட்ட இந்த நபர்,தனது வாயில் இருந்து நாக மாணிக்கக் கல்லை கக்கி ஆலய நிர்வாகத் தலை வரிடம் கொடுக்கப் பட்டது.இவ் அதிசய நிகழ்வு இன்று 10 .03 .2012 காலை நிகழப் பட்டது 


அம்பாள் ஆலயத்திற்கு மட்டக்களப்பில் இருந்து அம்பாளைத்தரிசிக்க வந்த அடியவர் ஒருவருக்கு ஏற்ப்பட்ட அருள் கலையில் நாகம் போன்று அசைந்தாடி நாகரத்தின கல்லினை தனது வாயினால் இரத்தத்துடன் கக்கி எடுத்து அதனை ஆலய நிர்வாக தலைவரிடம் வழங்கி இவ் நாகரத்தின கல்லினை 9 ஆண்டுகளுக்கு பின்னர் எடுக்கும் படி கூறியுள்ளார். 
 
மட்டக்களப்பில் இருந்து வந்த மூர்த்தி  தர்சன் என்ற அடியாரே இந்த அற்புதத்தை நிகழ்த்தினார் . 

அத்துடன் அவ் நாகரத்தின கல்லினை 9 வருடங்களின் பின்னர் பார்க்கின்ற போது அதன் முழு சக்தியும் அதில் புலப்படும் எனவும் இதனால் பார்ப்பவர்கள் பார்வை இழக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இவ் புனித நாகரத்தினத்தை பேப்பர் உறையினால் சுற்றி தற்போது ஆலய நகைப் பெட்டியினுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இவர் தனது அருள் கலையில் அம்பிகையின் ஆலயத்தோற்றம் போன்று ஆலயத்தின் நிலத்தின் அடியினில் இருப்பதாகவும் ஆலயத்தில் தற்போது உள்ளகல்வெட்டு போன்ற கல்வெட்டும் நிலத்தின் அடியினுள் இருப்பதாகவும் அக் கல்வெட்டை 9 வருடங்களின் பின்னர் எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 




இவ் அதிசய நிகழ்வு இன்று 10 .03 .2012 காலை இடம் பெற்றது. 

மேற்படி தகவல்கள் வேறு இருந்தால் பிரசுரிக்கப்படும்.....

நன்றி..

நயினை நாகபூஷணி அம்மன் பாதம் பணிந்து....
நயினைத் தினசரிச் செய்தி.
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி......
 


Friday, 18 November 2011

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!

" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.  அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.  சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது.  3 வினாடிகளுக்கு பிறகு  வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித  பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.


இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு  அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும்   ஸ்தம்பித்துவிடுகின்றன.     
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும்  கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.  விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.   அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த  விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால்  இந்த கோவில்தான்  இந்துக்களால்  'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது.  இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை  திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்.  மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.  அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர்.   இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
 திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

   இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும்.  நாம் பல  செயற்கைகோள்கள்  கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே

நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள்.  அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!


எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட
கில்லாடிகள் !!!!

எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.

நமக்கு மேலே ஒருவனடா....

ॐ..........சிவமயம்..........ॐ

Wednesday, 3 August 2011

இது என்ன தெரியுமா ?

லண்டனில்  தமிழ் சாப்பாட்டு கடை  ஒன்றில் சாப்பிட தயாரான நிலையில்  பொரித்த கோழி ஒன்றை இவ்வாறு  அலங்கார படுத்தி வைத்துள்ளனர் . இது ஒரு தமிழரின் கை வண்ணம் . தேசிக்காய் , மிளகாய் போன்றவற்றை கொண்டு தலை பகுதி  அலங்காரம்  செயபட்டுள்ளது .