Sunday, 18 December 2011

பேஸ்புக்கில் உங்கள் அந்தரங்கத் தகவல்களைப் பாதுகாக்க இன்னும் 6 நாட்கள் மட்டுமே

இவ்வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டதும், சர்ச்சையைக் கிளப்பியதும், இதுவரை பேஸ்புக்கினால் மேற்கொள்ளப்பட்டதுமான 'டைம்லைன்' வசதி நேற்று முதல் அதன் அனைத்து பாவனையாளர்களுக்கும் வழங்கப்பட்டது.
இதனை https://www.facebook.com/about/timeline என்ற முகவரியில் சென்று பெற்றுக்கொள்ள முடியும். கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு ' Get Timeline ' பட்டனை அழுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.
பாவனையாளர்கள் விரும்புகின்றார்களோ, இல்லையோ 'டைம்லைனு'க்கேற்ப உங்களது புரொஃபைல் மாற்றமடைந்தே தீரும்.
பேஸ்புக்கில் உங்களது அனைத்து நடவடிக்கைகளும் காலத்தின் அடிப்படையில் காட்சிப்படுத்தப்படும்.
தற்போது 'டைம்லைனை' பெற்றுக்கொள்ளும் போது உங்களுக்கு 7 நாட்கள் (Grace Period​) அவகாசம் கிடைக்கின்றது. அதாவது டிசம்பர் 22 ஆம் திகதி வரை. இக்காலப்பகுதியில் உங்கள் புரொஃபைல் டைம்லைனிற்கேற்ப மாற்றமடைந்த போதிலும் மற்றைய பாவனையாளர்கள் இதனைப் பார்வையிட முடியாது.
காரணம் கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Publish Now என்ற பட்டனை அழுத்தினால் மட்டுமே மற்றவர்கள் அதனைப் பார்வையிட முடியும். எனினும் இது 22 ஆம் திகதி வரை மட்டுமே.
எனவே பாவனையாளர்கள் தங்களது டைம்லைன் புரொஃபைலில் உங்களுக்குத் தேவையானவற்றை விட்டுவிட்டு மற்றவைகளை அழித்து விடவோ அல்லது டைம்லைனில் இருந்து மறைத்து வைக்கவோ முடியும். இதற்குப் பின்னரே ' Publish Now' வினைக் கொடுக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
இது இம்மாதம் 22 ஆம் திகதி வரை மட்டுமே. அதற்குப் பின்னர் உங்கள் டைம்லைன் புரொஃபைலினை அனைவரும் பார்வையிடக் கூடியதாக இருக்கும். எனவே இத்திகதிக்கு முன் அனைவரும் தங்களது அந்தரங்கத் தகவல்கள் வெளியே கசிய விடாமல் பாதுகாப்பதே இலகுவழியாகும்.

அமெரிக்கா இதுவரை கண்டிராத அதிர்ச்சியை ஈரான் கொடுத்துள்ளது !

அமெரிக்காவின் அதி நவீன ஆளில்லா உளவுபார்க்கும் விமானம் ஒன்றை கடந்த வாரம் தாம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்தது. ராடர் திரையில் விழாமல் தன்னை உருமறைத்துக்கொண்டு பறக்கத்தக்க இந்த விமானம் தான் இருக்கும் இடத்தை வேறு இடத்தில் இருப்பது போன்ற பொய்யான ...
தோற்றப்பாட்டையும் மேற்கொள்ள வல்லது. அதுமட்டுமல்லாது அதி நவீன கண்காணிப்புப் கருவிகளைக் கொண்டுள்ள இவ்விமானம் தரையில் இருந்துவரும் ஆபத்துக்களையும் அறிந்து அதற்கு ஏற்றால் போல தனது பறக்கும் திறனை மாற்றவல்லது.
இதனை எவ்வாறு சுட்டு வீழ்த்த முடியும் என்பதே பெரும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் அதனை ஈரானிய இராணுவத்தினர் பத்திரமாகத் தரையிறக்கியுள்ளனர் என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது. இவ்விடையம் ஏற்கனவே அமெரிக்காவுக்குத் தெரிந்திருக்கவேண்டும் ஆனால் அவர்கள் வாயே திறக்கவில்லை.
காரணம் ஈரான் தான் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்க அப்படியே இருக்கட்டும் என அமெரிக்க விட்டுவிட்டது. விமானம் சுடப்பட்டால் அது தரையில் வந்து விழும்போது சிறிய அளவிலாவது சேதம் ஏற்படும்.
ஆனால் சுட்டு வீழ்த்தியதாகச் சொல்லப்படும் விமானத்தை ஈரான் காட்டும்போது அதனைப் பார்த்து உலகமே ஒரு கணம் ஆடிப்போய்விட்டது. காரணம் அதில் எந்தச் சேதமும் இல்லை.
(மிகமிகக் குறைந்த ஒரு சேதத்தைத் தவிர) அப்படி என்றால் விமானத்தை எவ்வாறு ஈரான் இராணுவத்தினர் கைப்பற்றினார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. மேற்கொண்டு படியுங்கள் இந்த விடயத்தை
சம்பவ தினமன்று குறிப்பிட்ட விமானம்(RQ - 170) அப்கானிஸ்தான் வான் பரப்பில் பறப்பது போன்ற தோற்றப்பட்டை கொடுத்துக்கொண்டு பறப்பில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்கா சொல்கிறது அவ்விமானம் சிலவேளை ஈரானின் எல்லைப் பகுதிக்குள் தற்செயலாகச் சென்றிருக்கலாம் என்று. ஆனால் அந்த விமானம் ஈரான் நாட்டிற்குள் சுமார் 200 கிலோ மீட்டர் வரை ஊடுருவிச் சென்று வேவுபார்த்துள்ளது என்பதே உண்மையாகும்.
குறிப்பிட்ட விமனம் உள்வாங்கும் GPS சமிஞ்சைகளை ஈரான் அவதானித்து அதனை வைத்து அந்த ஆளில்லா விமானத்தை ஏமாற்றியுள்ளது. புரியவில்லையா ? அதாவது இந்த அதி நவீன ஆளில்லா விமானம் செயற்கைக்கோளில் இருந்து வெளியாகும் சில சமிஞ்சைகளை வைத்தே தனது (பாதை) பயணத்தை உறுதிசெய்கிறது.
அச் சமிஞ்சைகள் சிலவேளை கிடைக்கவில்லை என்றால் அது தானாகவே ஆட்டோ பைலட்(தானாகப் பறக்கும் திறனுக்கு) மாறும். ஈரான் முதலில் ஒருவகையன ஒலிக்கற்றைகளைப் பாவித்து செயற்கைக்கோளின் சமிஞ்சைகளைத் தடைசெய்துள்ளது.
அவ்விமானம் உடனே ஆட்டோ பைலட் சிஸ்டத்துக்கு தன்னை மாற்றி பறப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. இவ்வாறு பறப்பில் இருந்த விமானத்தின் கருவிகளோடு உடனடித் தொடர்பை ஏற்படுத்திய ஈரான் இராணுவத்தினர் விமானத்தில் ஏற்கனவே பதியப்பட்டிருந்த வரைபடங்களை மாற்றியுள்ளனர்.
உலகவரை படங்கள் சிலவற்றை மாற்றி அதனை அந்த விமானத்தின் மெமரியில் பதித்துள்ளனர். புதிதாகப் பதிக்கப்பட்ட மெமரியில் அந்த விமானம் இறங்கவேண்டிய இராணுவத் தளம் ஈரானின் ஒரு விமான நிலையம் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
அந்த விமானத்தைப் பொறுத்தவரை ஈரான் நாடு தான்.. தான் தரையிறங்கவேண்டிய கடைசி விமானநிலையம் என அது நினைத்துள்ளது. (அதாவது பாக்கிஸ்தான் இல்லையேல் அக்பானிஸ்தான் என்று அது நினைத்து ஈரானில் தரையிறங்கத் தயரானது).
இந்த விமானத்தை அதுவரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சி.ஐ.ஏ உளவு நிறுவனம் அதன் கட்டுப்பாட்டை சில நிமிடங்கள் இழந்தது.
அதனைச் சாதகமாகப் பயன்படுத்திய ஈரான் அந்த ஆளில்லா விமானம் இறங்கவேண்டிய குறியீடுகளை தாம் ஏற்கனவே ஏற்படுத்தியிருந்த தொடர்புகள் மூலம் உட்செலுத்தியுள்ளது. பறக்கும் அவ்விமானத்தின் உயரத்தை அவசரமாக கணக்கிட்ட அவர்கள் எத்தனை ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அது தரையிறங்கவேண்டும் என அறிவித்தல் சமிஞ்சைகளை விடுக்க அவ்விமானம் தனது சொந்த விமானநிலையத்துக்கு தாம் வந்துவிட்டதாகக் கருதி தரையிறங்கியுள்ளது.
இருப்பினும் எல்லாவற்றையும் படு கச்சிதமாகச் செய்த ஈரானின் இராணுவ வல்லுனர்கள் சிறிய பிழை ஒன்றைமட்டும் விட்டுவிட்டனர். விமானத்திற்க்கும் ஓடு தளத்திற்கும் இடையே உள்ள தூரத்தை துல்லியமாக அவர்கள் கணக்கிடவில்லை.
அதனால் அமெரிக்க விமானம் தரையிறங்கும்போது மெதுவாக இறங்கவில்லை. சற்றுக் கடினமான முறையில் தரையிறங்கி மிகச்சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளது அவ்வளவுதான்.
ஆனால் இது ஈரானின் பாரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. உலகில் உள்ள பல நாடுகளுக்கு மேல் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு நோட்டம் இட்டுள்ளது. இவ்விமானம் ரஷ்ய வான்பரப்பில் கூட பறந்து அங்கும் மண்ணைத்தூவி திரும்பியுள்ள நிலையில் இதனை ஈரான் எவ்வாறு துல்லியமாகக் கண்டு பிடித்து சுட்டு வீழ்த்தாமல் தரையிறக்கியுள்ளது என்பது பெரும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
இதனை விடப் பெரியவிடையம் என்னவென்றால் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு ஈரான் நாட்டிற்குள் வந்த சில நிமிடங்களில் எல்லாம் ஈரான் இராணுவ வல்லுனர்கள் கடுகதி வேகத்தில் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பது தான் தெரியவில்லையாம். இவ்விமானம் குறித்து ஏற்கனவே ஈரான் பல தகவல்களைத் தெரிந்துவைத்திருக்கிறதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது.
அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் தற்போது ஆழ்ந்த யோசனையில் உள்ளது. இதற்கான பதிலடியை ஈரானுக்கு எவ்வாறு கொடுப்பது என்பது அமெரிக்காவின் அடுத்த சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க கைப்பற்றப்பட்ட விமானத்தில் இருந்து அமெரிக்காவில் உள்ள தேசிய பாதுகாப்பு கம்பியூட்டர்களை அல்லது உளவு நிறுவனத்தின் கம்பியூட்டர்களைத் தொடர்புகொள்ள முடியும் என்பதனால் அனைத்துச் சேனல்களையும் அமெரிக்க பென்ரகன் பாதுகாப்பு மையம் தற்போது முடக்கியுள்ளதாம்.

Tuesday, 13 December 2011

Smart Friend List: பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி

உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஒரு செய்தியையோ அல்லது நிகழ்ச்சியையோ அல்லது அனுபவத்தையோ மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிகவும் பயனளிப்பது சமூக தளங்கள்.

சமூக தளங்களில் நாம் பகிரும் தகவல்கள் நண்பர்கள் அனைவருக்கும் அப்டேட்ஸ் செய்தி செல்கிறது. அதன் மூலம் நண்பர்கள் நம் தகவலை பார்க்க முடிகிறது.
ஆனால் சமூக தளங்களில் நம் நண்பர்கள் மட்டுமின்றி உறவினர்கள், தோழிகள் இப்படி பல தரப்பட்ட நண்பர்கள் இருப்பார்கள். இதில் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டும் செய்தியை அனுப்ப பேஸ்புக்கில் மிகுந்த சிரமம் எடுத்து அனுப்ப வேண்டும்.
ஆனால் கூகுள் பிளசிலோ இது மிகவும் சுலபம் தேவையானவருக்குக்கு ஒருவருக்கு மட்டும் கூட செய்தியை அனுப்பலாம். இதனை கருத்தில் கொண்டு பேஸ்புக் தளமும் இப்பொழுது புதிய வகை friend List வசதியை அறிமுகபடுத்தியுள்ளது.
இதற்கு முதலில் இந்த லிங்கில் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ திறக்கும் அதில் உங்கள் நண்பர்கள் பட்டியல் இருக்கும்.
இதில் ஒவ்வொரு நண்பருக்கு நேராகவும் Friends என்ற பட்டன் இருக்கும் அதில் கர்சரை வைத்தால் உங்களுக்கு சிறிய விண்டோ ஓபன் ஆகும் அதில் அந்த நண்பர் எந்த வகை சேர்ந்தவர் என்பதை தேர்வு செய்யவும்.
நீங்கள் நினைக்கும் பிரிவு அந்த லிஸ்டில் இல்லை என்றால் New List என்பதை அழுத்தி புதிய பிரிவை உருவாக்கி தேர்வு செய்து கொள்ளவும்.
நீங்கள் ஒவ்வொரு நண்பர்களையும் தேர்வு செய்தால் அந்த நண்பர்க்கு நேராக உள்ள பட்டனில் கர்சரை வைத்தால் அவர் உள்ள பிரிவை பார்க்கலாம்.
இது போல அனைவரையும் வெவ்வேறு பிரிவில் தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து உங்கள் wall பகுதிக்கு செல்லுங்கள். அங்கு நீங்கள் பகிர வேண்டிய தகவல் கொடுத்த பின்னர் Post பட்டனுக்கு அருகில் ஒரு பட்டன் Public or Friends என இருக்கும் அதில் கிளிக் செய்யவும்.
அதில் தகவல் பகிர வேண்டிய குறிப்பிட்ட ஒரு பிரிவை தேர்வு செய்து விட்டு Post பட்டனை அழுத்தினால் குறிப்பிட்ட நபருக்கு மட்டும் அந்த அப்டேட்ஸ் செல்லும் மற்ற நண்பர்களுக்கு செல்லாது.
குறிப்பிட்ட ஒரு விஷயம் நீங்கள் பகிரும் தகவல்கள் எப்பொழுதும் குறிப்பிட்ட நபருக்கு செல்ல கூடாது என நீங்கள் நினைத்தால் அந்த நபரை Restricted பிரிவில் சேர்த்து விடுங்கள்.
இனி நீங்கள் குறிப்பிட்ட நபர்களுக்கு உங்கள் அப்டேட்ஸ் அனுப்பி மகிழலாம். இந்த வசதி முழுக்க முழுக்க கூகிள் பிளசில் இருந்து கொப்பி அடிக்கபட்டாலும் பல பேருக்கு நிச்சயம் பயனளிக்கும்.

VLC மீடியா பிளேயரின் சிறப்பம்சங்கள்

கணணி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றை அறிந்திருப்போம். கணணியில் வீடியோ, ஓடியோ கோப்புகளை இயக்க உதவும் இலவச மென்பொருள்.

இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது.
ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அதன் படி VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள மூன்று ரகசிய வசதிகளை இங்கு காணலாம்.
1. Add Watermarks: குறிப்பிட்ட ஒரு வீடியோவுக்கு நம்முடைய பெயரையோ அல்லது நம் பிளாக்கின் பெயரையோ வாட்டர் மார்க்காக கொண்டுவர நாம் வேறு சில மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருப்போம். ஆனால் இந்த வசதி VLC மீடியா பிலேயரிலே இருக்கிறது.
அதற்கு VLC மென்பொருளை ஓபன் செய்து Tools - Effects and Filters - Video Effects - Vout/Overlay - சென்று வீடியோவுக்கு வாட்டர் மார்க் எபெக்ட் போட்டு கொள்ளலாம்.
2. Video Converter: நம்முடைய வீடியோ கோப்புகளை மாற்றம் செய்ய ஏராளமான இலவச மென்பொருட்களும், கட்டண மென்பொருள்களும் இருக்கின்றன். அதில் நமக்கு பிடித்த மென்பொருளை பயன்படுத்தி நாம் வீடியோவை மாற்றம் செய்கிறோம்.
ஆனால் VLC Media Player ல் இந்த  மாற்றம் செய்யும் வசதியும் உள்ளது. அதை உபயோகிக்க Media - Open File - Select Video மாற்றம் செய்ய வேண்டிய வீடியோவை தேர்வு செய்து கொண்டு பின்னர் Ctrl+R கொடுக்கவும்.
அடுத்த விண்டோவில் ADD பட்டனை கிளிக் செய்து மறுபடியும் வீடியோவை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Convert பட்டனை அழுத்தவும்.
அடுத்து Destination file என்பதில் Browse கிளிக் செய்து உங்கள் கோப்பு சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து வரும் விண்டோவில் பட்டனில் கிளிக் செய்து உங்கள் வீடியோ போர்மட் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
போர்மட் தேர்வு செய்தவுடன் Start பட்டனை அழுத்தினால் உங்கள் வீடியோ மாற்றம் செய்யப்பட்டு விடும்.
3. Free Online Radio: VLC மீடியா ப்ளேயரில் ஓன்லைனில் உள்ள ரேடியோக்களை எந்த வித கட்டணமுமின்றி இலவசமாக கேட்டு ரசிக்கலாம். இந்த வசதியை கொண்டு வர VLC யை ஓபன் செய்து Ctrl + L கொடுக்கவும்.
உங்களுக்கு இன்னொறு விண்டோ ஓபன் ஆகும். அதில் உள்ள Internet என்பதை கிளிக் செய்து ரேடியோ சேனல்கள் ஓபன் ஆகும். அதில் பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.

நம்முடைய ஐடி தெரியாமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு

இணையத்தில் இலவச மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவனம் பல உள்ளன. ஜிமெயில், யாகூ, ஹொட்மெயில் போன்ற நிறுவனங்கள் பிரபலமானவைகள்.
இந்த தளங்களில் நாம் உறுப்பினர் ஆகி நமக்கென ஒரு முகவரியை உருவாக்கி கொண்டு அதன் மூலம் நம் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்புகிறோம்.
ஆனால் நம்முடைய மின்னஞ்சல் முகவரியை மறைத்து மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இதன் மூலம் நண்பர்களுக்கு உங்களின் முகவரியை மறைத்து அனுப்பி கிண்டல் பண்ணலாம் மற்றும் ஒரு சில அலுவலகங்களில் முக்கிய மின்னஞ்சல் தளங்களை முடக்கி வைத்திருக்கலாம் அது போன்ற சமயங்களிலும் இந்த முறை உங்களுக்கு உதவி புரியும்.
Anonymous Mail அனுப்ப இந்த தளத்தில் செல்லுங்கள். உங்களுக்கு அந்த தளம் ஓபன் ஆனதும் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் To என்ற இடத்தில் அனுப்ப வேண்டிய முகவரியை கொடுக்கவும்.
Message என்ற பகுதியில் நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை கொடுத்து பிறகு கீழே உள்ள Send Anonymously என்ற பட்டனை அழுத்துங்கள். அவ்வளவு தான் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுக்காமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விடலாம்.

Friday, 9 December 2011

ஃபேஸ்புக் பாவனையாளர்களின் IP Address ஐ கண்டுபிடிப்பது எப்படி?

இன்று பேஸ்புக் கணக்கு வைத்திருக்காதவர்களே இருக்கமுடியாது. அந்தளவுக்கு பேஸ்புக் பிரபல்யம் பெற்றுள்ளது. எந்தளவுக்கு பிரபல்யமாகியுள்ளதோ அந்தளவுக்கு திருட்டு வேலைகளும் அதிகரித்துள்ளது. பேஸ்புக் கணக்கு திருடப்படுவது குறித்து பேஸ்புக் பாவனையாளர்களே! எச்சரிக்கை எனும் தலைப்பில் கடந்த பதிவில் விரிவாக எழுதியிருந்தேன்

இன்று பார்க்கப்போவது திருட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றி.



பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் பலரும் விரும்புவது அதிக நண்பர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையே. எம் துறை சார்ந்தவர்களையும் , எமது ரசனையுள்ளவர்களையும் நாம் அதிகம் நண்பர்களாக்கிக் கொள்வோம். இவ்வாறான நண்பர்களில் பெரும்பாலானவர்களை எமக்கு தெரிந்திருக்காது. யார் யார் உண்மையானவர்கள்? யார் போலியானவர்கள்? என்று எமக்கு தெரிவதில்லை. இவர்களில் பலர் வீண் வேலைகளில் ஈடுபடுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

அதிலும் பல ஆண்கள் பெண்களுடைய பெயரில் கணக்கை வைத்திருந்து தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தவிர பல வேண்டத்தகாத நபர்கள் போலிப்பெயர்களுடன் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு எமக்கு சிரமத்தை கொடுப்பார்கள். 

இவ்வாறானவர்களை எவ்வாறு அடையாளம் காண்பது?

மிகவும் இலகுவானது.......
ஆனால் குறித்த நபர் உங்கள் நண்பர் பட்டியலில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அவருடன் சிறிது நேரம் அரட்டை அடியுங்கள். அதற்கு முன்னர், பேஸ்புக்கை தவிர ஏனைய அனைத்து தளங்களையும் மூடிவிடுங்கள்( வேறு தளங்கள் திறந்து இருந்தால் மட்டும்). முடிந்தால் குக்கீஸ் மற்றும் உலாவியின் History போன்றவற்றையும் அழித்துவிடுங்கள். 

குறித்த நபருடன் அரட்டையில் ஈடுபட்டவாறே ‘Command Prompt‘ ஐ திறவுங்கள். (Start >Run>cmd)
அதன் பின்னர் Command Promp இல் netstat -an என்ற கட்டளையை கொடுத்து எண்டர் பண்ணுங்கள். அவ்வளவுதான். இப்போது உங்களுடன் தொடர்பில் உள்ளவரின்  IP Address காட்டப்படும். பின்னர் அதை  IP Address Trace பண்ணும் இணையங்களில் கொடுத்து அந்த நபர் பற்றிய விபரங்களை பெற்றிடுங்கள்.

IP Address Trace தளம்

Wednesday, 30 November 2011

இனி தொலைக்காட்சிப் பெட்டிகளும் உங்களை உன்னிப்பாக கண்காணிக்கும்

எம்மில் பெரும்பாலானோர் அடிக்கடி தொலைக்காட்சிகளைத் தான் அதில் வரும் அரசியல்வாதிகளின் அலட்டல்களின்போது திட்டுவோம். ஆனால் இனி அப்படிப் பேசமுடியாது.
இனி நாங்கள் அவதானமாகத்தான் கதைக்கவேண்டும். குறிப்பாக தொலைக்காட்சிகளை நோக்கிக் காட்டும் சைகைகளையிட்டும் கவனமாக இருங்கள்.
iTV என்ற புதிய தொலைக்காட்சியை அப்பிள் கணினி நிறுவனம் உருவாக்குகின்றது. இது உங்களது கத்தல்களை மட்டுமல்லாது உங்களது சைகைகளையும் பார்ப்பது மட்டுமல்லாமல் விளங்கியும் கொள்கின்றது.
ஓர் அமெரிக்க ஆய்வாளரின் கருத்துப்படி அடுத்த வருட இறுதியில் இது பயன்பாட்டிற்கு வரும். இந்தத் தொழினுட்பமே ஏற்கனவே Xbox விளையாட்டுக் கருவியில் இருக்கிறது.
எனினும் இந்தப் புதிய தொலைக்காட்சிக் கட்டுப்படுத்தும் வசதி அப்பிளின் முன்னேற்றம் என்றே கூறலாம்.
இந்தப் புதிய தொலைக்காட்சியில் இணையத்தில் கிடைக்கும் அனைத்துப் படங்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் BskyB போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களுடன் வலுவான போட்டியையும் உருவாக்கியுள்ளது எனலாம்.
இதன்மூலம் இவர்கள் ‘நான் முற்றுமுழுதாகவே இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய ஒருங்கிணைக்கப்பட்ட தொலைக்காட்சியொன்றை உருவாக்க விரும்புகின்றேன்’ என்று கூறிச்சென்ற அப்பிளின் முன்னாள் நிறுவுனர் Steve Jobs இன் எதிர்காலக் கனவினை உருவாக்கியதாகக் கூறுகின்றனர். 
இந்தச் சைகைகளை வீடியோக்களைத் திருத்துவதற்கும் தொலைக்காட்சியிலிருந்து ஒரு தொலைபேசிக்குப் படங்களை மாற்றமும் பயன்படுத்த முடியும் என இந்நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.

Facebook, Twitterஇனால் வேலை இழக்கும் அப்பாவி இளைஞர்கள்

அவுஸ்திரேலியாவின் 12 வீதமான வேலை வழங்குனர்கள் தமது விண்ணப்பதாரிகளின் Facebook  கணக்குகளைப் பார்த்து அவர்களை மறுப்பதாக Testra என்ற நிறுவனத்தின் கணிப்புக் கூறுகின்றது.
பெரும்பாலான அவுஸ்திரேலிய வேலை வழங்குநர்களும் சமூக வலையமைப்புகளைப் பயன்படுத்துவதால் தமது பணியாளர்களின் விபரங்களை அவர்களது சமூகப் பக்கங்களில் பார்த்து விண்ணப்பங்களை நீக்குவதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வு எவ்வாறு, எப்போது மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விடயங்களை இந்நிறுவனம் குறிப்பிடவில்லை.
எனினும் இதில் பொருத்தமற்ற படங்களை வெளியிடுவது (31வீத்ததினர்) மற்றும் படங்கள் பற்றிய பொருத்தமற்ற கருத்துக்களை வெளியிடுவது (37 வீதத்தினர்) போன்றவர்கள் பற்றியும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் நிறுவன உயர் அதிகாரிகள் தமது பணியாளர்கள் தம்மைப்பற்றி அல்லது நிறுவனத்தினைப் பற்றி மோசமான கருத்துக்களை வெளியிடவில்லை என கூறப்படுகிறது.
இதேவேளை தமது பணியாளர்களை 18 வீதமானோர் கண்காணிப்பதாகவும் 15 வீதமானோர் தமது பணியாளர்களின் உற்பத்திகள் பற்றிக் கண்காணிப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஐந்தில் ஒரு முதலாளிகள்தான் Facebook இல் தமது பணியாளர்களுடன் நண்பர்களாக இருக்கின்றனர் என இந்த ஆய்வு கூறுகிறது.
அத்துடன் Facebookஇல் தான் 41  வீதமானோர் தமது விண்ணப்பத்தாரிகளின் விபரங்களை அவர்களது பக்கங்களில் பார்க்கின்றனர்.
இதில் 31 வீதத்தினர் LindeIn பக்கங்களிலும் 14 வீதத்தினர் Twitter இலும் பார்க்கின்றனர் என்றும் இவ் ஆய்வு முடிவு கூறுகிறது.

உங்களின் இரகசியங்களை Facebook விளம்பரதாரர்களுக்கு விற்கிறது

Facebook தனது பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களில் பெருமளவானவற்றை  வெளியே விளம்பரப்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய அமைப்பினால் Facebook தனது பயனாளர்களின் அரசியல், பாலியல் மற்றும் சமய நம்பிக்கைகள் பற்றிய தகவல்களை வெளியிடும் முறையை நிறுத்தப் போவதாகக் கூறியுள்ளது.
நவீன மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்நிறுவனம் மக்களின் செயற்பாடுகளைப் பெற்றுக் கொண்டு அவற்றை விளம்பரதாரர்களுக்கு அனுப்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்த தனிப்பட்ட கருத்துக்கள் மீறப்படுவது தொடர்பாக ஜனவரியில் EC Directive என்ற புதியதொரு  அமைப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.
இவ் அமைப்பானது பயனாளர்களால் அனுமதிக்கப்படும் தகவலைத் தவிர  வேறொந்தத் தகவல்களையும் விளம்பரப்படுத்துவதைத் தடைசெய்யும் எனக் கூறப்படுகின்றது.
இங்கு பெறப்படும் தகவல்கள் அனைத்தும் அமெரிக்காவிலுள்ள கணினிகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் Facebook இனால் இதன் சட்டங்கள் மீறப்பட்டால் அதன்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்  அல்லது பாரியளவில் தண்டப்பணம் அறவிடப்படுமென்று கூறப்படுகின்றது.
இந்த நகர்வானது அடுத்த வருடம் Wall Street இன் பணமாற்றுத் திட்டத்தில் பங்குபற்ற நினைத்த Facebook இன் திட்டங்களைப் பாதிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த அமைப்பானது தற்போதைய தொழினுட்ப முன்னேற்றங்களுடனான ஐரோப்பிய தரவுப் பாதுகாப்புச் சட்டங்களைத் திருத்தும் என்றும் ஐரோப்பாவெங்கும் இது நடைமுறையிலுள்ளது என்பதை உறுதிப்படுத்துமென்றும் கூறப்படுகின்றது.
இதனால் ஐரோப்பிய நாடுகளிலுள்ள கொள்வனவாளர்கள் தமது தரவுகள் உறுதியாகப் பாதுகாக்கப்பட்டுள்ளனவா என்று  பார்க்கவேண்டும்.
ஒரு நிறுவனத்தினால் ஆராயப்பட்டு களஞ்சியப்படுத்தப்படும் பயனாளர்களின் தரவுகள் மட்டும் ஆராயப்படுவதில்லை.
அவர்களது பக்கங்களில் அவர்கள் தெரிவுசெய்யும் like மற்றும் dislike விபரங்களும் ஆராயப்படுகின்றதாகக் கூறப்படுகின்றது.
இதில் ஒருவரின் நண்பர்கள், குடும்பங்கள் மற்றும் கல்விசார் பின்னணிகள் பற்றிய தகவல்களும் இந்நிறுவனத்தினால் சேகரிக்கப்படுவதோடு அவர்களது வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களையும் கண்டுபிடிக்கின்றது.
இவற்றையெல்லாம் பெற்று ஒரு பெண் ஒரு மணப்பெண்ணாக வரக்கூடிய நிலையுள்ளதைக் கண்டுபிடித்து அவர்பற்றி விளம்பரங்களைத் திருமணப் படப்பிடிப்பாளர்களுக்குத் தெரிவிக்க விளம்பரம் செய்கின்றது.
இதுபோன்று இசையினைக் கேட்பவர்களின் பெறுமதியான விடயங்களையும் பெற்று விளம்பரதாரர்களுக்குக் கொடுக்கின்றது. இவ்வாறு நண்பர்களிடம் ஒவ்வொருவரும் பகிர்ந்துகொள்ளும் விபரங்களையும் அந்நிறுவனம் வர்த்தக நோக்கங்களிற்காகப் பயன்படுத்தலாம்.
எனினும் இந்த நிறுவனம் தான் தகவல்களை விளம்பரத்திற்காகப் பயன்படுத்தவில்லையென்று கூறிவருகின்றது.
மக்ஸ் ஸ்கிறீம்ஸ் என்ற ஓஸ்ரியாவைச் சேர்ந்த மாணவன் ஒருவன் தன்னைப் பற்றி என்ன விபரங்களை அது வைத்துள்ளதெனக் கேட்டிருந்தான். அதற்கு அந்நிறுவனம் 1,222 பக்கங்கள் கொண்ட ஓர் இறுவட்டினை அனுப்பிவைத்திருந்தது.
எனினும் அனுப்பிவைத்த விபரங்களில் முழு விபரங்களும் இல்லையென அம்மாணவன் தரவுக் கண்காணிப்பு நிறுவனங்களிடம் முறையிட்டிருந்தான்.
அடுத்த வாரம், Facebook நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள அயர்லாந்தில் வைத்து அந்நிறுவனத்தின் கணக்கெடுப்புகள் பற்றி தரவுப் பாதுகாப்பு அமைப்பினால் மேற்கொள்ளப்படுமென்றும் கூறப்படுகின்றது.
அனைத்து 800 மில்லியன் Facebook பயனாளர்களும் அவர்கள் அறிந்தோ அறியாமலே தமது தரவுத் தகவல்களை அந்நிறுவனம் பயன்படுத்த சம்மதித்துவிடுகின்றார்கள்.
ஏனெனில், இவர்கள் Sign up செய்யும்போது 4000 சொற்களடங்கிய ஒப்பந்தமொன்றை ஏற்றுக்கொண்டுதான் நுழைகின்றனர்.
இந்த ஒப்பந்தத்தினைப் பார்ப்பதற்கு ஒவ்வொரு பக்கத்தின கீழுள்ள சிறிய எழுத்துக்கெண்ட link இனை சொடுக்கிப் பார்க்கலாம்.
Facebook பாரியளவில் மைக்ரோசொப்ற்றுடன் ஒரு விளம்பர ஒப்பந்தத்தினை ஏற்படுத்திக் கொண்டது. ஆனால் 2009 இல்தான் அதன் படிப்படியான விளம்பர வளர்ச்சி ஏற்பட்டது.
இந்த வளர்ச்சிதான் Facebook இனை ஒரு பங்குச்சந்தைக்குள் நுழையத் தயாராக்கியதெனலாம்.
பிரித்தானியாவில் படிப்படியான அறிமுக விளம்பரங்களினால் 25மில்லியன் பவுண்கள் கடந்த இரண்டு வருடங்களில் பெறப்படுகின்றதெனக் கூறப்படுகின்றது.
எனினும் பயனளார்கள் எதிர்பார்க்கும் முறையில்தான் எந்தவொரு தரவுகளும் சேகரிக்கப்படவேண்டுமென பிரித்தானியத் தரவு அமைப்பின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
தனிப்பட்ட தரவானது மூன்றாவது நபரிடம் கொடுக்கப்பட்டால் அல்லது விளம்பரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டால் இதுபற்றி அப்பயனாளருக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்றும் கூறப்படுகின்றது.

Sunday, 20 November 2011

நோக்கியா வர்த்தகத்தை முன்னுக்கு கொண்டுசெல்ல உதவும் லூமியா 800 கைபேசி அறிமுகம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தன் மொபைல் போன்களில் அமைத்துத் தன் எதிர்கால வர்த்தகத்தினை மீண்டும் முன்னுக்குக் கொண்டு செல்ல நோக்கியா முயற்சி செய்கிறது.
அந்த வகையில், ஒக்டோபர் இறுதியில் தன் விண்டோஸ் மொபைல் போனாக லூமியா 800 என்ற மாடலை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. மீகோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் நோக்கியா என்9 போல இது வடிவமைக்கப் பட்டுள்ளது.
ஆனால் சில மாற்றங்களும் இதில் உள்ளன. என்9, ஆண்ட்ராய்ட் கேலக்ஸி நெக்ஸஸ், ஐ போன் 4எஸ் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், லூமியா 800 சற்று கூடுதல் வேகம் கொண்ட ப்ராசசரைக் கொண்டுள்ளது.
ஆனால், மற்றவற்றில் சிறிது பின்தங்கியே உள்ளது. ஐபோன் 4எஸ் -3.5 அங்குலம், என்9-3.7 அங்குலம் என்றபடி அமைக்கப்பட்டிருக்கையில், இதன் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே திரை 3.7 அங்குலம் அகலத்தில் உள்ளது.
கேலக்ஸி நெக்ஸஸ் திரை 4.65 அங்குலம் என்பது குறிப்பிடத்தக்கது. திரையின் ரெசல்யூசன் 800 x 480 என்ற படி மற்றவற்றிடமிருந்து குறைவானதாகவே உள்ளது. இதன் தடிமனும் மற்றவற்றைக் காட்டிலும் கூடுதலாக 12.1 மிமீ அளவில் அமைந்துள்ளது.
இதன் மொத்த பரிமாணம் 117 x 61 x 12 மிமீ. இதன் எடை 142 கிராம். லூமியாவின் ப்ராசசர் 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கக் கூடியது. இதன் ராம் நினைவகம் 512 எம்பி. உள் நினைவகம் விரிவுபடுத்த முடியாத 16ஜிபி அளவிலானது.
மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் இதில் இல்லை. இதன் கமரா 8 எம்பி திறனுடன், கார்ல் ஸெய்ஸ் லென்ஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வீடியோ அழைப்புகளுக்கு முன்புறமாக இதில் கமரா இல்லை. ஆண்ட்ராய்ட் இயக்கம் இல்லாத, ஐ- போன் அல்லாத, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் தேடுபவர்களுக்கு, நோக்கியாவின் லூமியா 800 ஒரு நல்ல போனாக இருக்கும்.
இதன் விண்டோஸ் மாங்கோ, இதனைப் பயன்படுத்துபவர்களுக்கு அனைத்து வழிகளிலும் புதிய அனுபவத்தினைத் தரும் என்பது உறுதி. பதியப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9, ஸ்கை ட்ரைவில் 25 ஜிபி டேட்டா பதிய அனுமதி எக்ஸ் பாக்ஸ் லைவ் இணைவு, மியூசிக் மற்றும் வீடியோ பிளேயர், 1450 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை இன்னும் சில சிறப்புகளாகும்.
கருப்பு, சியான் மற்றும் மெஜந்தா வண்ணங்களில் இந்த மாடல் கிடைக்கும். மேலே குறிக்கப்பட்டுள்ள அனைத்து திறன்களிலும் சற்று குறைவாகத்திறன் கொண்டதாக லூமியா 710 என்ற மாடலும் அறிமுகமாகியுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இவை அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ஆபாச படங்கள் மூலம் புதிய வகை ஹேக்கிங் நடவடிக்கையொன்று வேகமாக பயனாளர்களின் பக்கங்களை தாக்கி வருவதாக முறைப்பாடு எழுந்துள்ளது.
பேஸ்புக்கின் Newsfeeds இன் ஊடாக அனுப்பப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் செய்தி ஒன்றை கிளிக் செய்வதன் மூலம் தனிநபர் பேஸ்புக் பக்கங்கள் ஹேக் செய்யப்படுகின்றன.
பெங்களூரில் 2 இலட்சம் பேஸ்புக் பாவணையாளர்களது புரொபைல் பக்கம் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதாக Mid Day செய்தி தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஹேக்கிங் செய்யப்பட்ட புரொபைல் பக்கங்களிலிருந்து எடுக்கப்படும் புகைப்படங்கள், ஃமார்பிங் மூலம் ஆபாச புகைப்படங்களாக மாற்றப்பட்டு(Pornographic) அவர்களது நண்பர்களது மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பப்படுகிறது.
இது தொடர்பில் தமக்கு தொடர்ச்சியாக தொலைபேசி முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் தொடர்பான அரச பிரிவு பேஸ்புக் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளது.
இது ஒரு ஸ்பாம் நடவடிக்கை எனவும், இதனால் ஏற்பட்ட பாதிப்புக்களை கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக முயன்றுவருவதாகவும், ஸ்பாம் நடவடிக்கைகளிலிருந்து பாவணையாளர்களை காப்பதே எமது முதன்மையான செயற்பாடு எனவும் பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சில போலியான Malware மற்றும் சில ஜாவா ஸ்கிரிப்டினால் அனுப்பப்படும் செய்திகளை நம்பி ஏமாறும் பயனாளர்கள் தமது உலாவிகளில் அவற்றை பதிவிறக்கம் செய்துவிடுவதன் விளைவாக, இந்த தாக்குதல் உள்ளடக்கம் விரைவாக பகிரப்படுகிறது என பேஸ்புக் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த பிரச்சினை இந்தியாவில் மாத்திரமல்லாது சர்வதேச ரீதியில் பேஸ்புக்கிற்கு சிக்கலை கொடுத்துள்ளது. பெருமளவான ஸ்பாம்கள் இந்த ஆபாச படங்கள் ஊடாக பேஸ்புக் பயனாளர்களின் புரொபைல்களை தாக்க தொடங்கியுள்ளன.
இதனை தடுக்க தனது நிர்வாக கட்டமைப்பில் புதிய பாதுகாப்பு விடயங்களை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளதாகவும் பேஸ்புக் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகெங்கிலும் இருந்து சுமார் 800 மில்லியன் பயனாளர்கள், பேஸ்புக்கில் பதியப்படும் இந்த ஆபாசபடங்கள் தொடர்பில் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
இதுவொரு இனந்தெரியாத நபரின் ஹேக்கிங் நடவடிக்கையாக நிச்சயம் இருக்காது எனவும், யார் அந்த சந்தேக நபர் என்பது பேஸ்புக் நிர்வாகத்திற்கும் தெரிந்திருக்கலாம் எனவும் பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது.
பயனாளர்களது பேஸ்புக் பக்கத்தில் இந்த புதிய ஹேக்கிங் தாக்குதல் நடைபெறாமல் இருப்பதற்காக சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பேஸ்புக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இனந்தெரியாத கோட்களை, பேஸ்புக்கின் Address Bar இல் ஒரு போதும் Copy, Paste செய்யாதீர்கள். எப்போதும் அப்டேட் செய்யப்பட்ட உலாவியை பயன்படுத்துங்கள்.
ஏதும் வித்தியாசமான, அசாதாரண நடவடிக்கைகள் ஏதும் உங்களது பேஸ்புக் பக்கத்திலோ அல்லது நண்பர்களின் பக்கத்திலோ தோன்றினால் உடனடியாக Flag பட்டன் மூலம் பேஸ்புக்கின் Report Links ற்கு தெரியப்படுத்துங்கள்.

உங்களின் Password இதுதானா ? – 25 மிக மோசமான கடவுச்சொற்கள்

மக்கள் பொதுவாகத் தமது இணையத்தளங்களைத் திறப்பதற்காகப் பயன்படுத்தும் மிக மோசமான 25 கடவுச்சொற்களை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
இவ்வாறான கடவுச்சொற்கள் திருடர்களை மேன்மேலும் பலவீனமாக்கித் இலகுவாக உள்நுழைய வைத்து விடுமென்கின்றனர் நிபுணர்கள்.
இரண்டாவது பொதுவான கடவுச்சொல்லாக 123456 என்பது உள்ளது. இது இணையத் திருடர்களுக்கு ஒரு e-mail இற்குள் அல்லது Facebook இற்குள் நுழைய முயற்சிக்கும்போது மிக இலகுவாக ஊகித்துப் பிடிக்கக்கூடிய கடவுச்சொல்லாகும்.
ஓர் அமெரிக்கக் கடவுச்சொல் பராமரிப்புத் தரவு மென்பொருளான SplashData இனால் உருவாக்கப்பட்ட இந்தப் பட்டியலில் abc123, iloveyou மற்றும் monkey என்பன அடங்குகின்றன.
இணையத் திருடர்களால் நாளாந்தம் ஆயிரக்கணக்கான Facebook கணக்குகள் உடைக்கப்படுகின்றன என்பதை Facebook நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது.
ஒவ்வொரு 24 மணித்தியாலத்திலும் ஒரு பில்லியனிற்கும் அதிகமான நுழைவுகளில் 600,000 நுழைவுகள் ஏனையவர்களின் செய்திகள், படங்கள் மற்றும் வேறு தனிப்பட்ட Facebook தகவல்களைப் பெற முயல்பவர்களினதாக இருக்கும்.
இந்தக் கணக்கீட்டை முதன்முறையாக வெளியிட்டு நாளாந்தம் எவ்வாறு திருடர்களால் கணக்குகள் களவாடப்படுகின்றன என்பதை Facebook சுட்டிக் காட்டியுள்ளது.
30 வீதமானோர் தமது அனைத்து ஒன்லைன் கணக்குகளிலும் ஒரே கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதால் இவற்றை உடைத்து உள்நுழைவதும் திருடர்களுக்குச் சுலபமாகிவிடுகின்றது.
இதனால் ஒருவரின் முழு இணையத்தள விபரங்களையும் அவர்களால் பெற்றுவிடக்கூடிய அபாயமும் ஏற்படுகின்றது. எனினும் Facebook தான் இத்திருடர்களின் முதன்மை இலக்காக இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இணையப் பயனாளர்கள் அனைவரும் தமது ஏனைய கணக்குகளைப் பாதுகாக்க அவற்றைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு இந்நிறுவனம் கேட்டுக்கொள்கின்றது.
இதனால் மோசமான பட்டியலில் உள்ளடங்கும் கடவுச்சொற்களைப் பயன்படுத்துபவர்கள் எவரும் தமது கடவுச்சொற்களை உடனடியாக மாற்றுமாறு இந்நிறுவனம் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றது.
கடவுச்சொற்களைத் தெரிவுசெய்வதற்கான உதவிக்குறிப்புகள்
1. உங்களது கடவுச்சொற்களில் பல்வேறு வகைப்பட்ட அம்சங்களை இணைத்துப் பயன்படுத்துங்கள்.
2. இலக்கங்கள், எழுத்துக்கள் மற்றும் இயலுமாயின் special characters இணைத்துக்கொள்ளுங்கள்.
3. 8 characters இற்கு மேலுள்ள கடவுச்சொற்களைத் தெரிவுசெய்யுங்கள். குறுகிய சொற்களாயின் space அல்லது underscore மூலம் வேறுபடுத்துங்கள்.
4. பல்வேறு இணையத்தளங்களிற்கு ஒரேமாதிரியான கடவுச்சொற்களையும் பயனாளர் பெயரைம் பயன்படுத்தாதீர்கள்.
5. உங்களது பல்வேறு கணக்குகளை நினைவில் வைத்திருக்க ஒன்லைன் கடவுச்சொல் manager இனைப் பயன்படுத்துங்கள்.

மிக மோசமான இணையத்தளக் கடவுச்சொற் பட்டியல்

1. Password

2. 123456

3. 12345678

4. Querty

5. Abc123

6. Monkey

7. 1234567

8. Letmein

9. Trustno1

10. Dragon

11. Baseball

12. 111111

13. Iloveyou

14. Master

15. Sunshine

16. Ashley

17. Bailey

18. Passw0rd

19. Shadow

20. 123123

21. 654321

22. Superman

23. Qazwsx

24. Michael

25. Football