Sunday, 20 November 2011

உங்களின் Password இதுதானா ? – 25 மிக மோசமான கடவுச்சொற்கள்

மக்கள் பொதுவாகத் தமது இணையத்தளங்களைத் திறப்பதற்காகப் பயன்படுத்தும் மிக மோசமான 25 கடவுச்சொற்களை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
இவ்வாறான கடவுச்சொற்கள் திருடர்களை மேன்மேலும் பலவீனமாக்கித் இலகுவாக உள்நுழைய வைத்து விடுமென்கின்றனர் நிபுணர்கள்.
இரண்டாவது பொதுவான கடவுச்சொல்லாக 123456 என்பது உள்ளது. இது இணையத் திருடர்களுக்கு ஒரு e-mail இற்குள் அல்லது Facebook இற்குள் நுழைய முயற்சிக்கும்போது மிக இலகுவாக ஊகித்துப் பிடிக்கக்கூடிய கடவுச்சொல்லாகும்.
ஓர் அமெரிக்கக் கடவுச்சொல் பராமரிப்புத் தரவு மென்பொருளான SplashData இனால் உருவாக்கப்பட்ட இந்தப் பட்டியலில் abc123, iloveyou மற்றும் monkey என்பன அடங்குகின்றன.
இணையத் திருடர்களால் நாளாந்தம் ஆயிரக்கணக்கான Facebook கணக்குகள் உடைக்கப்படுகின்றன என்பதை Facebook நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது.
ஒவ்வொரு 24 மணித்தியாலத்திலும் ஒரு பில்லியனிற்கும் அதிகமான நுழைவுகளில் 600,000 நுழைவுகள் ஏனையவர்களின் செய்திகள், படங்கள் மற்றும் வேறு தனிப்பட்ட Facebook தகவல்களைப் பெற முயல்பவர்களினதாக இருக்கும்.
இந்தக் கணக்கீட்டை முதன்முறையாக வெளியிட்டு நாளாந்தம் எவ்வாறு திருடர்களால் கணக்குகள் களவாடப்படுகின்றன என்பதை Facebook சுட்டிக் காட்டியுள்ளது.
30 வீதமானோர் தமது அனைத்து ஒன்லைன் கணக்குகளிலும் ஒரே கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதால் இவற்றை உடைத்து உள்நுழைவதும் திருடர்களுக்குச் சுலபமாகிவிடுகின்றது.
இதனால் ஒருவரின் முழு இணையத்தள விபரங்களையும் அவர்களால் பெற்றுவிடக்கூடிய அபாயமும் ஏற்படுகின்றது. எனினும் Facebook தான் இத்திருடர்களின் முதன்மை இலக்காக இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இணையப் பயனாளர்கள் அனைவரும் தமது ஏனைய கணக்குகளைப் பாதுகாக்க அவற்றைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு இந்நிறுவனம் கேட்டுக்கொள்கின்றது.
இதனால் மோசமான பட்டியலில் உள்ளடங்கும் கடவுச்சொற்களைப் பயன்படுத்துபவர்கள் எவரும் தமது கடவுச்சொற்களை உடனடியாக மாற்றுமாறு இந்நிறுவனம் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றது.
கடவுச்சொற்களைத் தெரிவுசெய்வதற்கான உதவிக்குறிப்புகள்
1. உங்களது கடவுச்சொற்களில் பல்வேறு வகைப்பட்ட அம்சங்களை இணைத்துப் பயன்படுத்துங்கள்.
2. இலக்கங்கள், எழுத்துக்கள் மற்றும் இயலுமாயின் special characters இணைத்துக்கொள்ளுங்கள்.
3. 8 characters இற்கு மேலுள்ள கடவுச்சொற்களைத் தெரிவுசெய்யுங்கள். குறுகிய சொற்களாயின் space அல்லது underscore மூலம் வேறுபடுத்துங்கள்.
4. பல்வேறு இணையத்தளங்களிற்கு ஒரேமாதிரியான கடவுச்சொற்களையும் பயனாளர் பெயரைம் பயன்படுத்தாதீர்கள்.
5. உங்களது பல்வேறு கணக்குகளை நினைவில் வைத்திருக்க ஒன்லைன் கடவுச்சொல் manager இனைப் பயன்படுத்துங்கள்.

மிக மோசமான இணையத்தளக் கடவுச்சொற் பட்டியல்

1. Password

2. 123456

3. 12345678

4. Querty

5. Abc123

6. Monkey

7. 1234567

8. Letmein

9. Trustno1

10. Dragon

11. Baseball

12. 111111

13. Iloveyou

14. Master

15. Sunshine

16. Ashley

17. Bailey

18. Passw0rd

19. Shadow

20. 123123

21. 654321

22. Superman

23. Qazwsx

24. Michael

25. Football

Friday, 18 November 2011

பேஸ்புக் கணக்கை தற்காலிகமாக செயலழிக்க செய்வதற்கு

பேஸ்புக் மிகப்பிரபலமான சமூக இணையதளம். இணையத்தில் அனைவருக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு பிடித்த சமூக இணையதளம் என்றால் அது பேஸ்புக்காக தான் இருக்கும்.
ஒரு சில நேரத்தில் உங்களுடைய பேஸ்புக் கணக்கை செயலிழக்க செய்ய நீங்கள் நினைக்கலாம் இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது முக்கியமாக உங்கள் கணக்கை யாராவது ஹாக் செய்தாலோ, இந்த தளத்தினால் நேரம் வீணாக செலவாகிறது என நினைக்கலாம்.
ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்கு வைத்திருப்பதால் ஒன்றை செயலிழக்க வைக்க நினைக்கலாம். இப்படி பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
முதலில் பேஸ்புக் தளத்திற்கு சென்று நீங்கள் செயலிழக்க வைக்க வேண்டிய கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
பிறகு Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.
Account Settings கொடுத்தவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். அதில் Security என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
Security லிங்கை கிளிக் செய்தவுடன் வரும் விண்டோவில் கீழே இருக்கும் Deactivate your account என்ற ஒரு லிங்க் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
அடுத்து இன்னொரு விண்டோ வரும். அதில் நீங்கள் இந்த கணக்கை Deactivate செய்கிறீர்கள் என்ற சில ஆப்ஷன்கள் காட்டும் அதில் உங்களுக்கானத்தை தேர்வு செய்யவும்.
Email opt out என்ற இடத்தில் டிக் மார்க் கொடுக்கவும்(டிக் பண்ணாமல் விட்டால் பேஸ்புக்கில் இருந்து Invitations,Notifications ஈமெயில்கள் வந்து கொண்டே இருக்கும்)
அடுத்து கீழே உள்ள Confirm பட்டனை அழுத்தவும். அடுத்து இந்த கணக்கின் பாஸ்வேர்ட் கேட்கும். அதை கொடுத்த பின்னர் இன்னொரு Popup விண்டோ வந்து Verfication Code அதையும் சரியாக கொடுத்து Submit பட்டனை அழுத்தினால் உங்களுக்கு ஒரு விண்டோ வரும்.
அவ்வளவு தான் உங்களின் கணக்கு Deactivate செய்யப்படும். உங்கள் Profile யாராவது ஓபன் செய்தால் This Content is Current Unavailable என்ற செய்தி தான் வரும்.
இந்த கணக்கு தற்காலிகமாக தான் பேஸ்புக் தளத்தில் இருந்து நீக்கப்படும். ஆதலால் இந்த கணக்கை நீங்கள் எப்பொழுது நினைத்தாலும் மீண்டும் செயல்படுத்தி கொள்ளலாம்.
எப்பொழுதும் போல இந்த கணக்கின் ID, PASSWORD கொடுத்து நுழைந்தால் தானாகவே Reactivate ஆகிவிடும்.

புகைப்படங்களை அழகான ஆல்பமாக உருவாக்குவதற்கு

புகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க போட்டோஷாப்பில் எண்ணற்ற PSD டிசைன் கோப்புகள் உள்ளன.
ஆனால் நமது விருப்பதற்கேற்ப திருமணம், பிறந்தநாள், காலண்டர், அன்னையர் தினம், குழந்தைகள் தினம், காதலர்தினம் என விருப்பத்திற்கேற்ப ஆலபம் தயாரிக்கலாம். 15 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும்.

பின் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் Scropbook, Greeting Card, Calendor என்பதில் எது உங்களுக்கு தேவையோ அதனை தேர்வு செய்துகொள்ளளலாம்.
Scrapbook ல் உப தலைப்புகளாக Holiday, Birthday, Family, baby, Kids, Wedding என இருக்கும். இதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
தேர்வு செய்யப்பட்ட விண்டோவில் நமக்கு அதிக அளவு டிசைன்கள் இருக்கும். உங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு டிசைனை தேர்வு செய்து அதனை டவுண்லோடு செய்துகொள்ளலாம்.
டிசைனை தேர்வு செய்தபின்னர் நாம் நமது விருப்பபடி நாம் புகைப்படங்களை தேர்வு செய்துகொள்ளலாம்.
புகைப்படங்களை Autofill முறையிலும் தேர்வு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு புத்தகத்திலும் ஐந்து டிசைன்கள் இருக்கும். தேவைப்பட்டால் நாம் டிசைன்களை அதிகப்படியாக சேர்த்துக் கொள்ளலாம்.

Google + என்பது ஒரு சமூக வலைத்தளமல்ல – ஆய்வாளரின் விளக்கம்

Google + என்பது facebook ற்கு போட்டியாக காணப்படுகின்ற சமூக வலைத்தளம் ஆகும். ஆனால் தற்போது இவ் வலைத்தளத்தினை சமூக வலைத்தளமாக கொள்ள முடியாது என google கம்பனியின் தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது சிலந்தி வலை போன்று பரந்து காணப்படுகின்றமையால் பாவனையாளர்களின் தகவல் தேடலுக்கு உதவுகின்றது.
google என்பது ஏனைய வலைத்தளங்களைவிட வித்தியாசமானதாகவே காணப்படுகின்றது. ஆகவே இது சாதாரண ஏனைய வலைத் தளங்கள் போன்ற சமூக வலைத் தளமாக காணப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
இத் திட்டமானது google அதிகாரிகளுக்கென உருவாக்கப்பட்டது. சமூகத்தில் காணப்படும் அச்சுறுத்தல்கள் தமது நிறுவன சேவைகள் உற்பத்திகள் பற்றி பாவனையாளர்களுக்கு வழங்குவதற்கென உருவாக்கப்பட்டதே இத் தளமாகும்.
இது ஓர் சிலந்தி வலை போன்று காணப்படுவதால் தமது உற்பத்திகள் பற்றி மட்டுமன்றி அனைத்து நிறுவனங்களினதும் உற்பத்திகளையும் முதன்முறையாக பாவனையாளர்களின் தகவல் தேவைக்காக வழங்கி உள்ளது.
Google profile ஐ பலர் பயன்படுத்துவதற்கும் இதுவே காரணமாகும்.
Google + ஆனது பல நம்ப முடியாத தனித்துவமான தகவல்களை பாவனையாளர்களுக்கு வழங்குகின்றது.
இதன் நோக்கம் அனைத்து வலைத் தளத்திற்கும் சமூக சேவைகளை வழங்குவதன் மூலம் தனக்கென தனித்துவமான ஓர் இடத்தை அமைத்துக் கொள்வதும் google பக்கங்களையே பெரும்பாலான பாவனையாளர்கள் பயன்படுத்த வேண்டுமென்பதும் ஆகும்.
வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையான சௌகரியமான வலைத்தளங்களை google + உருவாக்குகின்றது.
பயன்படுத்த தெரியாதவர்கள் கூட பயன்படுத்த கூடிய வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

பேஸ்புக்கில் அதிகம் ஏமாற்றப்படுபவர்கள் ஆண்களே – ஆய்வில் தகவல்

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் விரைவாக மோசடியில் சிக்குபவர்கள் ஆண்களே என்று அண்மையில் நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பெண்கள் இந்த மாதிரியான விஷயங்களில் சிக்கிக்கொள்வது மிகவும் குறைவாகக் காணப்படுகின்றார்கள்.
இதற்கு மோசடியாளர்கள் அதிகமாக பெண்களை பயன்படுத்தியே தமது வலையை விரிக்கின்றனர்.
இதனால் பெண்களை விட ஆண்களே இந்த மாதிரி சில்மிஷங்களில் சிக்கித்தவிக்கின்றனர்.
லண்டன் மற்றும் அமெரிக்காவில் 1,649 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த சுவாரசியமான அறிக்கை வெளிவந்துள்ளது.
ஆண்கள் பெண்களை விட சீக்கிரத்தில் மயங்குவார்கள் கிடைக்கும் எனவும் ஆண்களே இவ்வாறு சிக்கல்களில் மாட்டுவதாக அந்த ஆய்வு கூறுகின்றது.
இவர்களையும் லேசாக சமூக வலைத்தளங்களின் மூலமாக மடக்கி விட முடியும். பேஸ்புக் பயன்படுத்தும் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும்.
ஆண்களுக்கு வரும் friend request க்கு ஒருபோதும் மறுப்பு தெரிவிப்பதில்லையாம். ஆனால் பெண்கள் தமக்கு தெரிந்தவர்களை மட்டுமே ADD பண்ணுகிறார்கள். மற்றவர்களை ignore செய்கிறார்கள்.
கண்டபடி எல்லாவற்றையும் ADD பண்ணும் ஆண்களுக்கு தான் ஆப்புகள் அதிகமாக அடிக்கின்றன. இவ்வாறானவர்களுக்கு தங்களது ரகசியங்களை பகிர்வதும் ஆபத்தை அதிகரிக்கின்றன.
இதுபோன்ற சமூகவலைத்தளங்கள் பொழுதுபோக்கை மட்டுமே நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டவை.
இவற்றில் வாழ்க்கையை தொலைத்து பின் தேடுவது முட்டாள்தனமானது. கண்முன்னே பார்ப்பதெல்லாம் கவர்ச்சியாக தோன்றினாலும் உள்ளிருக்கும் ஆபத்து பின்னாளில் தான் தெரியவரும்.

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!

" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.  அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.  சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது.  3 வினாடிகளுக்கு பிறகு  வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித  பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.


இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு  அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும்   ஸ்தம்பித்துவிடுகின்றன.     
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும்  கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.  விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.   அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த  விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால்  இந்த கோவில்தான்  இந்துக்களால்  'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது.  இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை  திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்.  மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.  அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர்.   இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
 திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

   இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும்.  நாம் பல  செயற்கைகோள்கள்  கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே

நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள்.  அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!


எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட
கில்லாடிகள் !!!!

எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.

நமக்கு மேலே ஒருவனடா....

ॐ..........சிவமயம்..........ॐ

Wednesday, 9 November 2011

இயற்கையில் கொள்ளை போகும் இதயங்களே! இது உங்களுக்காக (பட இணைப்பு)


பிரித்தானியாவின் இலையுதிர் காலத்தில் ஏற்பட்டுள்ள இயற்கையில் வனப்பான தோற்றப்பாடுகள் உலக மக்கள் அனைவரையும் தன்பால் ஈர்த்துள்ளது.
இது ஒன்றும் அதிசயமான விடயம் இல்லைத்தான். எனினும் இயற்கையின் மாற்றங்கள் அல்லது காலநிலை மாற்றம் என்பது யாராலும் எதிர்வு கூறமுடியாதது.
பிரித்தானியாவின் இலையுதிர் கால தோற்றம் இயற்கைப் பிரியர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.
இங்கு நேற்றைய தினம் சூரியன் இளம் சிவப்பு நிறமாக தோற்றமளித்துள்ளது. இதற்கு முன்னர் வெள்ளிக்கிழமை பனிப்புயல் வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

நோக்கியா-ஜாவா செல்போன்களில் கோப்புக்களை மென்பொருள் உதவியின்றி மறைக்கலாம்


கைத்தொலைபேசிகளில் வைத்திருக்கும் ரகசிய கோப்புக்களை எந்தவித மென்பொருளின் உதவியின்றி மறைக்கவேண்டுமா.
அதற்கு அந்த கைத்தொலைபேசிகளிலேயே இலகுவான வழி ஒன்று உள்ளது. ஆனால் முக்கிய தேவை, அந்த கைத்தொலைபேசி ஜாவா புரோக்கிராமிற்கு ஒத்துழைக்கக்கூடியதாக இருக்கவேண்டும்.
நோக்கியா,சம்சங், மோட்டோரோலா, எல்.ஜி போன்ற வகை கைத்தொலைபேசிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடியன. பெரும்பாலும் இப்போது வரும் அனைத்து கைத்தொலைபேசிகளும் ஜாவா உள்ளடக்கப்பட்டே வருகின்றன.
ஆகவே உங்கள் கைத்தொலைபேசியில் ஜாவா உள்ளடக்கப்பட்டிருந்தால் கீழ்கூறியபடி செய்யுங்கள்
முதலில் நீங்கள் மறைக்கவேண்டிய கோப்புக்களை ஒரு போல்டரில் இட்டுக்கொள்ளுங்கள். உதாரணமாக புகைப்படங்களை மறைத்து வைக்கவேண்டுமானால் Images என்ற பெயரில் ஒரு போல்டரினை உருவாக்கி அதனுள் புகைப்படங்களை இட்டு வைக்கலாம்
நீங்கள் உருவாக்கிய போல்டரின் பெயர் .jad என்ற extension இல முடிந்திருக்கவேண்டும். உதாரணமாக Images.jad என்றபடி இருக்கவேண்டும்.
அடுத்ததாக அதே இடத்தில் அதே பெயரிலான (Images) வெற்று போல்டர் ஒன்றினை உருவாக்குங்கள். ஆனால் அதன் extension .jar என்று முடிவடையவேண்டும். உதாரணமாக Images.jar
அவ்வளவும்தான். இப்போது Images.jad என்று பெயரிடப்பட்ட புகைப்படங்களை உள்ளடக்கிய போல்டர் மறைந்துவிடும். அதேவேளை Images.jar என்று பெயரிடப்பட்ட போலி போல்டர் கண்ணுக்கு தெரியக்கூடியதாக இருக்கும்.
இப்போது புகைப்படங்களை கொண்ட போல்டரை எடுக்க வேண்டுமானால் Images.jar என்ற போலி பெயர் கொண்ட போல்டரை நீக்கிவிடுங்கள். புகைப்படங்களை கொண்ட போல்டர் கண்ணுக்கு தெரியக்கூடியதாக இருக்கும்

கணினிக்கு தேவையான அடிப்படை மென்பொருட்கள் இலவசமாக ஒரே இடத்தில்


ஒரு கணினி கொண்டிருக்கவேண்டிய அடிப்படையான மென்பொருகளை ஒரு தளம் பட்டியல் படுத்தி தருகிறது.
இங்கு 90 இற்கும் மேற்பட்ட பயன்மிகு, இலவச மென்பொருட்கள் வகை வகையாக பிரிக்கப்பட்டு உள்ளன. அதாவது WebBrowsers,  Messanging, Media என பல வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளது.
இவற்றை தரவிறக்குவதும் இலகு.
இந்த தளத்துக்கு சென்று உங்களுக்கு வேண்டிய மென்பொருட்களை தெரிவ்செய்துவிட்டு Get Installer என்பதை கொடுத்தால் முதலில் அதற்கான தரவிறக்கி உங்கள் கணினியி சேமிக்கப்படும்.
அதன் பின்னர் அந்த தரவிறக்கியை திறந்தால் நாம் ஏற்கனவே தெரிவிசெய்த மென்பொருட்கள் தரவிறங்க ஆரம்பிக்கும்.
இந்த தளம் செல்ல : Ninite 


பேஸ்புக்கில் புதிய வைரஸ் – அவதானம்


நாளுக்கு நாள் பேஸ்புக்கில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதற்கேற்றாற்போல் சட்டவிரோதமாக அடுத்தவர் கணக்கினுள் புகுந்து தகவல்களை திருடும் வேலைகளும் முன்னரை விட இப்போது அதிகரித்துள்ளன.
இப்போது புதுவிதமாக கருத்தைக் கவரும் செய்திகளுடன் பல இணைப்புக்கள் வருகின்றன. இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்தால் உங்கள் தகவல்கள் திருடப்பட்டு உங்கள் கணக்கு முடக்கப்படும் அபாயம் உள்ளது.
ஆரம்பத்திலேயே இவ்வாறான Spam இணைப்புக்கள் வந்தபோதும், தற்போது பேஸ்புக் தனது பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கிய பின்பு ஓரளவு குறைந்திருந்தன.
மறுபடியும் இப்போது முன்னரைப்போல இந்த Spam இணைப்புகள் எல்லோர் கணக்கிற்கும் வரத்தொடங்கியுள்ளன. அந்த வகையில் இப்போது புதிதாக வந்திருக்கிறது ஓர் Spam இணைப்பு.
“SICK I Just Hate Rihana after Watshing this video” என்ற ஓர் செய்தியுடன் ஓர் இணைப்பு எல்லோர் கணக்கிற்கும் வருகிறது.
ஆபாச இணைப்பு போல் தோன்றும் இந்த இணைப்பை கிளிக் செய்தால் ஒரு பக்கத்திற்கு (Fan Page) செல்கிறது. நீங்கள் அந்த பக்கத்தை Like பண்ணினால்தான் அந்த வீடியோவை பார்க்கமுடியும் என்று சொல்கிறது.  ஆனால் நீங்கள் Like பண்ணினால் அங்கே எந்த வீடியோ இணைப்பும் காணப்படமாட்டாது.
மாறாக உங்கள் கணக்கு தொடர்பான தகவல்கள் முழுவதும் திரட்டப்படுகிறது. சிலவேளைகளில் உங்கள் கணக்கு முடக்கப்படும் அபாயங்களும் உள்ளன.
அத்துடன் நீங்கள் இந்த இணைப்பை கிளிக் செய்தவுடன் உங்கள் நண்பர்களின் Wall இல் உங்கள் பெயருடன் பதியப்படுகின்றன. உங்கள் நண்பர்களும் நீங்கள்தான் பகிர்ந்துகொண்டதாக கருதி அந்த இணைப்பை கிளிக் செய்வார்கள்.  அதனால் அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆகவே இவ்வாறான இணைப்புக்கள் வரும்போது அது பற்றி பேஸ்புக் குழுமத்திற்கு Report செய்துவிட்டு அந்த இணைப்புக்களை நீக்கிவிடுவது நல்லது

Saturday, 5 November 2011

பேஸ்புக்கில் நாம் கூறும் கருத்துக்களை பதிவு செய்கிறது கூகிள்


பேஸ்புக் பாவனையாளர்கள் தெரிவிக்கும் தகவல்களை அட்டவணைப்படுத்தும் புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருப்பதாக கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இத்தொழில்நுட்பம் இணையதள வலைப்பின்னலின் எல்லா பகுதிகளுக்கும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும் எனத் தெரிவிக்கிறது.
ஆனால் இவ்வாறு பாவனையாளர்கள் வழங்கியுள்ள தகவல்களை கூகிள் அட்டவணைப்படுத்துவதன் காரணமாக பேஸ்புக் பாவனையாளர் தயக்கமடைந்துள்ளனர்.
தங்களுடைய செய்திகளை பிறர் அறிந்து கொள்வார்கள் என்ற அச்சம் பாவனையாளர்களின் மத்தியில் நிலவுவதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
பேஸ்புக்கிள் வழங்கப்பட்ட கருத்துக்களை கூக்கிள் இஸ்பைடர் அவற்றினை பதிவு செய்து நிரைப்படுத்தும்.
யாராவது ஒருவர் ஏதாவது கருத்தைச் சொன்னால் தேவைப்பட்டும் போது அதனை மீளவும் பார்க்கமுடியும். வேறொருவர் தம்மைப்பற்றி கூறியவற்றையும் அட்டவணையில் இருந்து அறிந்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

இன்று நவம்பர் 5, பேஸ்புக்கை ஹெக் செய்வதாக சவால் விடுக்கப்பட்ட தினம்: முடியுமா அவர்களால்?



இன்று நவம்பர் மாதம் 5 ஆம் திகதி பேஸ்புக் சமூக வலையமைப்பினை ஹெக்கிங் செய்து நிறுத்துவதாக சவால் விடுத்திருந்தது 'Anonymous' என்ற பிரபலமான ஹெக்கர்களின் குழு.இது தொடர்பான செய்தியை அக்குழு வெளியிட்ட காணொளியுடன் நாம் உங்களுக்கு வழங்கியிருந்தோம். 

எனினும் இன்றும் அதாவது இச்செய்தி எழுதப்படும் வரை பேஸ்புக் வலையமைப்பு சிறப்பாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. 

' ஒபரேஷன் பேஸ்புக்' என அத்திட்டம் பெயரிடப்பட்டுள்ளதாக அக்குழு அறிவித்திருந்தது. 

இச்செய்தியை நாம் எளிதில் புறக்கணித்து விடாத காரணம் அக்குழுவின் சில நடவடிக்கைகளாகும். 

கடந்த சில காலங்களாக பல முக்கிய நிறுவனங்களின் குறிப்பாக மாஸ்டர் கார்ட், பேபேல் மற்றும் அமெசொன் ஆகியவற்றின் இணையக்கட்டமைப்புகளை ஹெக்கிங் செய்திருந்தது. 

ஆனாலும் அக்குழுவால் பேஸ்புக்கினை வீழ்த்த முடியாமல் போனதா? அல்லது அத்திட்டத்தினைக் கைவிட்டுவிட்டதா? 

இது தொடர்பில் அக்குழு தகவல் எதனையும் இதுவரை வெளியிடவில்லை. 

எனினும் இன்றைய தினம் முடிவதற்கு இன்னும் பல மணித்தியாலங்கள் உள்ளன. 

எனவே பொறுத்திருந்து பார்ப்போம்!

Wednesday, 2 November 2011

காயங்கள்


எல்லோரின் இதயத்திலும் 
காயங்கள் உண்டு 

அதை வெளிப்படுத்தும் 
விதம்தான் வித்தியாசம் 

உரிமை உள்ளவர்களிடம் 
கண்ணீராக... 

மற்றவர்களிடம் 
புன்னகையாக...

மாற்றத்தை விரும்பும் இந்த மானிட உலகில் ..

எதுவுமே நிரந்திரமற்ற 
இந்த மானிட வாழ்வில் , 
நாம் விரும்புவர் மட்டும் 
எப்படி நிரந்திரமாவர் ?? 
நம்மை விரும்புவர் மத்தியில் 
நம் பேர் நிலைக்கும் 
என நாம் கனவு ஒன்று 
கண்டாலும் அது எப்படி நிறைவேறும் ?? 
மாற்றத்தை விரும்பும் இந்த 
மானிட உலகில் ..

Monday, 31 October 2011

உலகம் முழுவதும் பேசப்படும் 17 வயது தமிழ்ச் சிறுவன்: கான்சரை குணப்படுத்துவானா ?காணொளி(வீடியோ இணைப்பு)

கனடாவில் வசிக்கும் வெறும் 17 வயதாகும் தமிழ் சிறுவன் ஒருவன் இன்று உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறார். அபிக்குமரன் அன்று அழைக்கப்படும் இச் சிறுவன் 17 வயதில் டாக்டர் பட்டத்தைப் பெற்றது மட்டுமல்லாது கான்சரை குணப்படுத்த ஒரு பொறிமுறையைக் கண்டறிந்துள்ளார்
அதனை அவர் கனடாவில் உள்ள கான்சர் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பிவைக்க அங்கே பணி புரியும் மூத்த ஆராட்சியாளர் ஒருவர் தலையில் கைவைக்கும் அளவு அந்தப் பொறிமுறை அமைந்திருந்தது. சொல்லிப் புரியவைக்க முடியாத அந்தப் பொறிமுறையை விரிவாகப் பார்த்தால் அதன் மூலம் கான்சர் செல்களை அழித்து அந் நோயை முற்றாக குணப்படுத்த அது ஏதுவாக அமையும் என்பதனை அறிந்த மூத்த ஆய்வாளர் அபிக்குமரனை அழைத்து தனது ஆய்வகத்தில் வேலைசெய்ய அனுமதித்துள்ளார்.
இன்று கனடா முழுவதும் பேசப்படும் 17 வயது நிரம்பிய தமிழர் யார் என்று கேட்டால் இந்த அபிக்குமரன் தான். அவர் வளர்ந்துவரும் நிலையில் இன்னும் சில காலத்தில் அவர் உருவாக்கியுள்ள பொறிமுறையைக் கையாண்டால் கான்சரை முற்றாக அழிக்க முடியும் என மூத்த ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கான்சர் என்னும் உயிர் கொல்லி நோயை அழிக்கப் பிறந்த ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அபிக்குமரன் உள்ளார் என அவரை பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளனர் பல மூத்த ஆய்வாளர்கள். அச் சிறுவனிடம் புதைந்து கிடக்கும் அறிவும் ஆற்றலும் தம்மை பிரமிக்கவைப்பதாகவும் 30 ஆண்டுகளாக தாம் செய்திராத ஆராட்சிகளை அச் சிறுவன் வித்தியாசமாகவும் வேறு கோணத்திலும் சிந்தித்துச் செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.

காணொளி(வீடியோ இணைப்பு)




தமிழன் என்ற பெருமை எமக்கும் உண்டு

வீரம் வீரம் என்று சொல்லி என்ன செய்தோம்… கடைசியாக எல்லோரும் செத்தது தானே மிச்சம் ---->

வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு… ஒரு நாட்டோடு ஒன்பது நாடுகள் மோதுவது வீரமல்ல, துரோகம் !

இன்னும் என்ன தோழா?
நம்மை இங்கே நாமே தொலைத்தோமே??
நம்ப முடியாதா?நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே..
யாரும் இல்லை தடைபோட.. 
வந்தால் அலையாய் வருவோம்..
வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்
!http://www.facebook.com/photo.php?v=265806833454431